Skip to main content

பொன்னாத்தாவின் ...புலம்பல்!












கழனியில வேல பாக்க
கலங்கி நின்னதில்ல...
கட்டுக் கதிரு சுமந்தும் ....
நடக்க சிரமப்பட்டதில்ல...
கையில் இரண்டு இடுப்பில் ஒண்ணு...
வயித்தில் ஒண்ணு....
இருந்த போதும் கவலையில்ல...
பத்துவீடு...சுத்திவந்து...
பத்துபாத்திரம் தேய்ப்பதில....
கூட... குறையுமில்ல...
மூலையில கிடந்தாலும்...
மூணுவேளை கஞ்சி ஊத்த...கஷ்டமில்ல....!
இரவு பகல் பாராம...
மிருகமா என்னை வேட்டையாடி...
கொன்னாலும்...பரவாயில்லை...
மொட்டையா போற...மகன்...
குடிச்சு...குடிச்சு.....சீரழிஞ்சு...
அவன் குடல கருக்கி...எங்க உசிர....
எடுக்காம இருந்தா சரிதேன்...!
கவுர்மெண்டே...கட துறந்து...
கருமாதி நடத்துதே....!
காந்தி போட்டோவ.....
காகிதத்தில் போட்டு வச்சு....
கல்லாவுல சமாதியாக்கி....
கல்லுக்கடை (டாஸ்மாக்) நடத்துதே!
கேக்க ஒரு நாதி இல்ல....
என் சுமைய எறக்கி வைக்க யாருமில்ல...
எல்லா சாமிய கும்பிட்டும்....
ஒரு சாமிக்கு கூட காதும் இல்ல...!

என்னதான் நவீனமயமாக்கல்...புதிய தொழில்களின் முதலீடு....தொழில் நுட்ப வளர்ச்சி, மகளிர் இட ஒதுக்கீடு என்று நாம் பேசி வந்தாலும்....மது அரக்கன் தமிழகத்தின் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையினை பதம் பார்க்கமல் இல்லை. குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதி வைத்து விட்டு...தேசப்பிதாவாய்...மகாத்மவை ஏற்றுக் கொண்ட ஒரு ஜன நாயக நாட்டில் ஏன் ஒரு பூரண மதுவிலக்க்கினை நம்மால் ஏற்படுத்த முடியவில்லை? என்பது... இன்று பிறக்கும் குழந்தை கூட கேட்கும் ஞானக் கேள்வி.


நமது மக்களுக்கு மதுவின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு தேவை...! மேல் தட்டு மக்கள் இதனை பற்றிய விழிப்புணர்வு கொஞ்சமேனும் கொண்டிருப்பதால் அவர்களின் வாழ்வியல் முறையில் அதிக பிரச்சினைகள் ஏற்படுவதில்லை ஆனால்.....வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மிகைப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் தான் பாதிக்கப்படுகின்றன. கல்வியின்மையும்....மதுவினை பற்றிய விழிப்புணர்வும் இல்லாததுதான் இதற்கு காரணம்....!


அரசியல்வாதிகளும் , தன்னார்வதொண்டு நிறுவனங்களும்...மிக முக்கியமாக ஊடகங்கள் மது பற்றிய விழுப்புணர்வு பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்த வேண்டும்! அறியாமையின் காரணமாக மதுக்கடைகளில் வீழ்ந்து கிடக்கும் எம்மக்களை காப்பாற்ற அரசு மிக முக்கிய முடிவுகளை உடனடியாக எடுத்தால் அது வறுமையில் வாடி மது அரக்கனால் சீரழிந்து கொண்டிருக்கும் லட்சக் கணக்கான மக்களை காப்பற்றி...சீரான, தெளிவான அடுத்த தலைமுறையை சர்வ நிச்சயமாய் உண்டாக்கும்!


தேவா. S

Comments

Chitra said…
ஜன நாயக நாட்டில் ஏன் ஒரு பூரண மதுவிலக்க்கினை நம்மால் ஏற்படுத்த முடியவில்லை? என்பது... இன்று பிறக்கும் குழந்தை கூட கேட்கும் ஞானக் கேள்வி.


நமது மக்களுக்கு மதுவின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு தேவை...!

...... தேவா, மதுவை ஒழித்தால் - கள்ள சாராய கோட்டையில் மாட்டி விடுகிறார்கள். நீங்கள் சொல்லியபடி, மக்களிடம் ஒரு விழிப்புணர்வு தான் தேவை. அரசாங்கத்துக்கும் இதில் பங்கு உண்டு. கல்லாவை கட்டி கொண்டிருக்கிறவர்கள், கண்ணீரை பற்றி கவலைப்படுவார்களா?
Chitra said…
Dheva, I think the song makes the blog page to open slowly. So, some people may not have the patience to wait for the page to load completely to read your valuable thoughts and articles.
வாவ் ரொம்ப அருமையான கவிதை..

மது அரக்கனின் அராஜகத்தில் மக்கள் வெளிவரவேண்டும் எனபதை அழகான கவிதையில் வடித்திருக்கிறீர்கள்.
dheva said…
மிக்க நன்றி சித்ரா....! பாடலை தூக்கிவிட்டேன்....இப்போது வேகமாக பதிவுகளை படிக்க முடியும். ஆமாம் சித்ரா....மதுவை பூரணமாக ஒழிப்பது என்பது வேறு விதமன கள்ளத்தனமான வேலைகளுக்கு காரணமாகிவிடும்....ஒழிப்பை விட...விழிப்புணர்வுதான் அவசியம்!

உங்களின் கருத்துக்களுக்கு நன்றி....!
dheva said…
நன்றி திரு. ஸ்டார் ராஜன்....உங்களின் முதல் வருகைக்கு நன்றி....! தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்!
அன்பின் தேவா

மதுவின் பிடியில் இருந்து வெளியேற மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். அது மெதுவாகத்தான் வரும். விளைவுகளை நன்கு அறிந்தும் பல காரணக்களுக்காக மதுவைனி நாடுகிறார்கள். என்ன செய்வது ......

நல்ல சிந்தனை தேவா
நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த