Skip to main content

காதல்....சொல்ல வந்தேன்....!


















உன்னைப் பற்றிய... நினைவுகளையும்..
உன் மீதுள்ள...காதலையும்...
எத்தனை முறை எழுத்தாக்கினாலும்...
அவை குறைப்பிறசவ...
குழந்தைகளாய்தான் ஜனிக்கின்றன!

கற்பனைக் கெட்டா...காதலுணர்வினை...
கவிதைக்குள் கொண்டுவர...
பகீரதனாய்...பிராயத்தனம்
செய்கிறேன் தினமும்!

ஒரு ஓவியனாய் மாறி...
ஓராயிரம்...சித்திரங்களில்..
நம் காதலை...கொண்டுவர...
முயன்று..முயன்று...
கைகள் ஊனமானதுதான் மிச்சம்!

இசையாய் உன்னை ....
வெளிப்படுத்த..எண்ணி..
ஓராயிரம் சந்தங்கள் இட்டாலும்
எல்லம் வெறும் சப்தமாய்..
மட்டுமே...வெளிவருகிறது...!

என் மூச்சுக்காற்றை
ராகமாக்கி...காதலை...
வாசிப்பாய்...மாற்ற நினைத்தால்...
காதலை உள்வாங்கிக் கொண்டு
வெறும் காற்றை மட்டுமே...
துப்புகிறது... புல்லாங்குழல்!

எப்படி சொல்வது...
எனக்குள் இருக்கும் ..
நீ சொல்ல நினைக்கும் காதலை...
ஓராயிரம் முறை யோசித்தாலும்...
மூளையிடம் கேட்கும்...
வெறும் யாசிப்பாய்...
நின்று விடுகிறது என் நினைவுகள்!

இந்த கணமின்றி...
எல்லாக் காலங்களிலும்...
நிறைந்திருக்க வேண்டும்..
என் காவிய காதல்...
கவலையாய் சிந்தித்து..சிந்தித்து
வெளிப்படுத்த முடியாமலேயே...
அழிந்து போகுமா என் அற்புதக்காதல்!

நிறைவாய் கொட்டும் ...காட்டறுவி....,
நிறைந்து அடந்த பச்சைப் பசுமையான காடு...
யாருமற்ற வெட்டவெளி...
ஆர்ப்பரிக்கும்..பரந்த கடல்...
நட்சத்திரங்கள் நிறைந்த வானம்...
இவற்றில் எல்லாம் சூட்சுமமாய்..
நிறைத்து வைதிருக்கிறேன்...
எனக்குள் இருக்கும் ..
நீ சொல்ல நினைக்கும் காதலை...
மெளனமாய் நீ…
வாசிக்கும் தருணங்களில்...
உன் நினைவுகளில்...இருப்பேன்...
நித்ய காதலனாய்!

காதலை வார்த்தைகளில் சொல்லிவிட்டால் நாமும் சராசரியில் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் தனது காதலை சொல்லாமலேயே உள்ளே தேக்கி வைத்திருக்கும் ஒரு வித்தியாசமான காதலனின் மனோ நிலையின் வெளிப்பாடாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் தான் இந்த கவிதை.

எல்லாவகையிலும் முயன்று...முயன்று அதன் பிரமாண்டாத்தை விளக்கமுடியாமல் தனக்குள்ளேயே மரணித்து விடுமோ இவனின் காதல் என்ற அச்சத்தின் விளைவாக காதலை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்ற தீர்க்கமான முடிவில்...இயற்கை எல்லாம் காதல்தானே என்று உணர்ந்து...தனது காதலியை இயற்கையின் பிரமாண்டகளைப் பார்க்கச் சொல்லுகிறான்...ஒவ்வொரு முறையும் பிரமாண்டமான் இந்த இயற்கையை கண்டு தன் காதலி வியக்கும் தருணங்களில் எல்லாம் இவனின் காதலைக் கொண்டு அவள் பிரமித்ததாகத்தானே ஆகும்....

எப்போதுமே..சொல்லாத காதலில்தான் சுகம் அதிகம்...அதுவும் வார்த்தையில்ல இவனின் வர்ணிப்பினால் காலங்கள் கடந்தும் இவன் காதலின் விளக்கங்கள் நிலைத்து நின்று இவனை நித்ய காதலனாய் ஆக்கும்.....இது தான் அவனின் காதலின்...வெளிப்பாடு...!

ஒரு சென் டைப்பில் முடித்து விட்டேன் கவிதையை....என்று தான் நினைக்கிறேன்...! நிதானமாய்..படித்து முடிக்கும் நேரத்தில் உங்களை ஒரு தியான நிலைக்கு இந்தக் கவிதை அழைத்துச் சென்றால் ஆச்சர்யமில்லை!

தேவா. S

Comments

அருமை . வாழ்த்துக்கள்
@தேவா
//எனக்குள் இருக்கும் ..
நீ சொல்ல நினைக்கும் காதலை...
மெளனமாய் நீ…
வாசிக்கும் தருணங்களில்...
உன் நினைவுகளில்...இருப்பேன்...
நித்ய காதலனாய்! //

ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரிகள்..

முழு கவிதையும் ரசித்து படித்தேன்.. நீங்க ரொம்ப அழகா எழுதறீங்க தேவா..!!

உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!

கவிதை படித்து முடித்ததும் எனக்கு த்யான நிலை வந்ததோ இல்லையோ..
ஆனால் உங்கள் அன்பான மனதின் அழகு தெரிந்தது..

தொடரட்டும் உங்கள் பயணம்.. :) :)
Chitra said…
ிறைவாய் கொட்டும் ...காட்டறுவி....,
நிறைந்து அடந்த பச்சைப் பசுமையான காடு...
யாருமற்ற வெட்டவெளி...
ஆர்ப்பரிக்கும்..பரந்த கடல்...
நட்சத்திரங்கள் நிறைந்த வானம்...
இவற்றில் எல்லாம் சூட்சுமமாய்..
நிறைத்து வைதிருக்கிறேன்...
எனக்குள் இருக்கும் ..
நீ சொல்ல நினைக்கும் காதலை...
மெளனமாய் நீ…
வாசிக்கும் தருணங்களில்...
உன் நினைவுகளில்...இருப்பேன்...
நித்ய காதலனாய்!


..... super! தேவா, ரொம்ப ரசித்து ஒன்றி போய் எழுதி இருக்கீங்க என்று தெரியுது. நல்லா இருக்குங்க. புதன் கிழமை, பௌர்ணமி. நல்ல நிலவு வெளிச்சத்தில் மீண்டும் படிக்க வைக்கும் கவிதை. :-)
sorry for the late comment and vote. usually, I rarely check blogs on saturdays and sundays.
dheva said…
@ நன்றி சரவணன் உங்களின் கருத்துக்களுக்கு நன்றி!

@ மிக்க சந்தோசம் ஆனந்தி.. உங்களின் பின்னூட்டங்கள் மேலுமொரு உந்து சக்தியாய் இருந்து நல்ல படைப்புகளை நிச்சயம் வெளிக்கொணரும்.

@சித்ரா.. இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை அதனால்தான் நீங்க லேட்ட வந்தீங்கன்னு எனக்கு தெரியும். உங்கள் எல்ல பின்னூட்டங்களும் என்னுடைய அடுத்த படைப்புகான வித்து....! மிக்க நன்றி....!
Vinoth Kumar said…
முழு கவிதையையும் ரசித்தேன்..
அதிலும்..

//என் மூச்சுக்காற்றை
ராகமாக்கி...காதலை...
வாசிப்பாய்...மாற்ற நினைத்தால்...
காதலை உள்வாங்கிக் கொண்டு
வெறும் காற்றை மட்டுமே...
துப்புகிறது... புல்லாங்குழல்!

//

அருமையான வரிகள்.. நல்ல சிந்தனை....
Anonymous said…
எப்போதுமே..சொல்லாத காதலில்தான் சுகம் அதிகம்.//
அப்புரம் கடைசியில பிரம்மாசாரிதான்
Anonymous said…
//கவலையாய் சிந்தித்து..சிந்தித்து
வெளிப்படுத்த முடியாமலேயே...
அழிந்து போகுமா என் அற்புதக்காதல்!//
Kaathalum Oru thavam thaane,

than thavatthai veliyil sollamattan yogi..

thavam kalaitthaal thaan athu saatthiyam..

oru sillidum aruviyil kulittha sugam udalengum paravi nirkkirathu.

appadiyoru vartthaigalin pravagam..

vaasitthu muditthu kangalai moodi kavithaiyil ondrinaal kaatrodu karainthu ellaiyatra kathalodu naanum kaathalagip ponen..

Nandri anna... For the Great Lines and experience...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த