Skip to main content

மறந்தால் நாம் தமிழரில்லை...!


ஒரு வருட காலம் ஆகிவிட்டது....இன்றோடு.. கடந்த மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமை ஜென்ம ஜென்மமாக தமிழனின் கண் முன் நின்று ஆடிக் கொண்டே இருக்கும், ஆண்களையும் பெண்களையும் கொன்று குவித்து உலக நாடுகளுடன் சேர்ந்து ஒரு வெறியாட்டம் ஆடி..போர் மரபுகளை எல்லாம் உடைத்து....தமிழனின் ரத்தம் குடிக்கப்பட்ட நாள்.

கேணல் சூசையின் கடைசி பேச்சினை நான் யூ ட்யூப் வழியாகக் கேட்டேன்.....காட்சிகள் இப்போதும் கண் முன் விரிந்து நிற்கிறது.....

" எங்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்....எங்கு நோக்கிலும் விமானங்கள் குண்டுகளை இட்டு தமிழர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது...எங்கு பார்த்தாலும் பிணங்கள் ...இரத்தம்... பச்சிளம் குழந்தைகள் தாய்மாரை இழந்தும்...பெண்கள் குழந்தைகளை இழந்தும்....கைகால்கள் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும்....ஆண்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் பெரிய பிழையை இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது....."

சர்வதேச சமுதாயமே சரணடைகிறோம் என்று அழைப்பு விடுத்தார் கேணல் சூசை,

மன்னிப்பும் மனிதனேயமும் தமிழன் உலகிற்கு கற்றுக் கொடுத்த பாடங்கள்....! அதை சரியாக படிக்காத சர்வதேச சமுதாய்ம்....கொன்றழித்தது.....தமிழனோடு சேர்த்து அவன் படித்துக் கொடுத்த பாடங்களையும். " கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி " என்ற பெருமையோடு...கல்லுக்குள்ளும் மண்ணுக்குள்ளும் புதையுண்டு போயின நமது உறவுகள்!

தமிழ் பேசினதாலேயே....தமிழன் என்பதாலேயே....அழிக்கப்பட்ட ஒரே இனம் நமது இனம் தான். இந்த பகிங்கர இன அழிப்பை தாய் தேசத்து தமிழன் உணர விடாமல் வேகமாய் காய் நகர்த்தி தமிழ் நாட்டு ஊடகங்களை எல்லாம் தமது கட்டளைகளால் கட்டி வைத்தது ஆளும் அரசு கட்சிகள்....! தன் சொந்த இனத்தை எதிரிகள் சொக்கட்டான் ஆடிய வேளையில் மானாட மயிலாட பார்த்து விட்டு தேசியம் பேசிக் கொண்டிருந்தான் தாய்த்தமிழன்.

அரசியல் கட்சிகள் எல்லாம் வேக வேகமாய்....தமது ஓட்டு வலைக்கு ஈழத்தமிழன் என்று பெயரிட்டு...பகிங்கர பிச்சையை ஆரம்பித்தன. எதிர்கால அரசியல்வாதிகள் என்று சொல்லக்கூடிய.... நடிகர் நடிகைகள் ஒரு பக்கம், அரசியல்வாதிகள் ஒரு பக்கம் என்று தமது பிரபல்யம் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய வியாபர உத்தியின் மூலப்பொருளாக தமிழன் வைக்கப்பட்டான். அப்பாவி முத்துக்குமரன்கள் தன்னை தீவைத்து கொளுத்திக் கொண்டு.....இந்த கயவர் பூமியில் இருந்து புறப்பட்டு போய்விடுவோம் என்று போய்விட்டான்.

இன அழிப்பின் உக்கிரத்தில் தமிழக அரசியல்வாதிகள் நினைத்திருந்தால் எத்தனையோ தமிழர்களின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்...கையில் பதவி இருந்தவர்கள் எல்லாம்....கடிதம் எழுதியும், தந்தி கொடுத்தும் கொண்டு உண்ணாவிரத மேடைக்காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருந்த போது அடி பட்ட தமிழன் தண்ணீர் இல்லாமலும், மருத்துவ உதவி இல்லாமலும் அலறிக் கொண்டிருந்தான்.

போர் நிறுத்தம் என்ற..இந்திய அரசின் அரசியல் உபாயத்தை சரியாக பின்பற்றி....தேர்தல் முடியும் வரை காத்திருந்த......ராஜபக்ஸே.......! தேர்தல் முடிவுகளுக்குப்பின் தற்காலிகமாய் அணிந்திருந்த மனித முகமூடியை கழட்டிவிட்டு மீண்டும் ஒரு உக்கிர தாக்குதல் நடத்தினார்! ஆளும் கட்சியினருடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்....கண்டிப்பாய் ஈழத்தில் போர் நிறுத்தம் வரும் என்று மனப்பால் குடித்த தமிழன் முகத்தில் பூசப்பட்டது கரி. தமிழரைக் கொண்டே...தமிழரை அழிக்கும் உத்தியை அறிந்து வைத்திருந்தது இத்தாலியமும் இந்தியமும் கலந்த மூளை....தமிழன் நொறுக்கப்பட்டான். வரலாற்றில் மருது பாண்டியர்களுக்கும், பூலித்தேவனுக்கும், கட்டபொம்மனுக்கும், வீரன் சுந்தரலிங்கத்துக்கும் என்ன நடந்ததோ.... அதை மறுக்காமல் வரலாறு ஈழத்தமிழனுக்கும் வழங்கி தனது வேலையை செவ்வனே முடித்துக்கொண்டது...

காலம் கடந்துவிட்டது ...தோழர்களே.... இதை வெறுமனே....ஒரு நினைவு கூறும் ஒரு கட்டுரையாக நினைக்காமல்....இதை உங்களுக்குள் விதையாக விதைத்து வைக்கிறேன். ஒவ்வொரு தமிழனும் தனது சந்ததியினருக்கு நம் இனம் வஞ்சிக்கப்பட்டதையும்..... நமது மக்கள் விரட்டப்பட்தையும்....கதையாய் பாடலாய் சொல்லுங்கள்.......முள்ளிவாய்காலில் பலியான பல்லாயிரக்கணக்கான நமது உறவுகளின் ஆன்மா சாந்தியடைய.....எல்லம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வதோடு......


வரிப்புலியின்....வெஞ்சினத்தை நெஞ்சினில் கொள்வோம்!



தேவா. S

Comments

//அப்பாவி முத்துக்குமரன்கள் தன்னை தீவைத்து கொளுத்திக் கொண்டு.....இந்த கயவர் பூமியில் இருந்து புறப்பட்டு போய்விடுவோம் என்று போய்விட்டான்.//

இங்கதாங்க அவர் தப்பு பண்ணிட்டார்... அரசியல் நாடகாமாடின எவனையாவது கொளுத்தியிருந்தாருன்னா இன்னும் சந்தோஷப்பட்டிருக்கலாம்.... (நான் எனும் வக்கத்தவனுக்குள் ஒலிக்கம் வீரவசனம் இது))

நல்ல கட்டுரை.... விதையாகவே....
Chitra said…
தேவையான நல்ல இடுகை.
அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.
ஓயாத அலைகளாய் மீண்டும் எழுவோம் என்று இந்த நாளில் அனைத்து தமிழர்களும் உறுதியேற்போம்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த