Skip to main content

அது அதுவாகவே...இருக்கிறது... !
















அது அதுவாகவே...இருக்கிறது...
அலட்டலும்...அறிமுகமுமின்றி..
தேவைகளை எல்லாம் சூன்யமாக்கி
சலமின்றி...அது இருக்கிறது.
விதிகளை எல்லாம் புறம்தள்ளி....
புலன்களுக்கு புலப்படாத...
ஒரு புன்னகையுடன்!

ஆர்ப்பாட்டமான மனதுக்குதான்....
எல்லாம் தேவையாகி இருக்கிறது...
கடவுளையும் சேர்த்து....
மெல்ல மெல்ல நிகழும்
நிகழ்வுகளோ..எல்லாவற்றையும்
உடைத்துப் போட்டு விடுகிறது...
பல நேரங்களில் கடவுளையும் கூட!

கேள்விகள் கேட்கும் மனதுக்கு
எப்போதும் புரிவதில்லை...
பதில்கள் இல்லையென்று...!
பதிலே இல்லாமல் கேள்விகளே...
பதிலாய் மாறும் விந்தைதான்...
பல நேரங்களில் புரியாமல்...
தர்க்க வாய்ப்பாட்டுக்குள்
தள்ளிவிடுகிறது மனிதனை!

ஆசைகளின் விளிம்புகள்
எல்லாம் அறியாமையிலிருந்து
எட்டிப்பார்க்க....
மரணத்தை மறுக்கும்...
மனிதனுக்கு தேவைப்படுகிறது...
ஆத்திகமும் நாத்திகமும்....!
மற்றபடி...அது அதுவாகவே...இருக்கிறது...!

எப்படி வேண்டுமானால் கற்பிதங்கள் கொள்ளுங்கள் மனிதர்களே....! உங்களின் எந்த செயலும் அல்லது சொல்லும் அதை பாதிப்பதில்லை...இன்னும் சொல்லப்போனால் உங்களின் அறியமையையும் தர்க்கங்களையும், பல விதமான நம்பிக்கைகளையும் உள்ளடக்கி அது....ஆனந்தத்தில் சலனமின்றி சந்தோசித்து இருக்கிறது.

விடைதேட முயலும் மனம்தான் நடுக்கடலில் தவிக்கும் படகு போல தத்தளிக்கிறது...கடல் என்னவோ அந்க படகையும் சேர்த்துக் கொண்டு ஒரு புரிதலோடு மெளனமாய்த்தானிருக்கிறது...! ஏனென்றால் கடலுக்குத் தெரியும்...காற்றடித்தால் கரை சேரும்...இல்லை எனில் அங்கேயே இருக்கும். கடலை பொறுத்த மட்டில் இரண்டும் ஒன்றுதான்....! எதிர்பார்க்கும் மனிதர்களுக்குத்தன் எல்லா அலைச்சல்களும்..! மனமில்லாத மிருங்கங்கள் கூட இயற்கையின் பகுதியாகி விடுகின்றன....ஆனால் மனிதனோ.... எப்போதும் சுமந்து கொண்டிருக்கிறான் கற்பனைகளையும்...கற்பிதங்களையும்...

எது எப்படி ஆனாலும் சரி....


"அது அதுவாகவே...இருக்கிறது...!"


தேவா. S

Comments

Paleo God said…
யோசிக்கத்தெரிந்தவை தவிர எல்லாமே அதுவாகவேதான் இருக்கிறது!

--

உங்க டெம்ப்ளேட் மாத்துங்கன்னு சொல்லனம்னு நினெச்சேன். இப்ப இருக்கறதும் ரொம்ப பளிச்சுனு இருக்கு வேற நல்லதா மாத்துங்க தேவா. ஃபாலோயர்ஸ் விட்ஜெட் என்னாச்சு?
Chitra said…
விடைதேட முயலும் மனம்தான் நடுக்கடலில் தவிக்கும் படகு போல தத்தளிக்கிறது...கடல் என்னவோ அந்க படகையும் சேர்த்துக் கொண்டு ஒரு புரிதலோடு மெளனமாய்த்தானிருக்கிறது...! ஏனென்றால் கடலுக்குத் தெரியும்...காற்றடித்தால் கரை சேரும்...இல்லை எனில் அங்கேயே இருக்கும். கடலை பொறுத்த மட்டில் இரண்டும் ஒன்றுதான்....! எதிர்பார்க்கும் மனிதர்களுக்குத்தன் எல்லா அலைச்சல்களும்..! மனமில்லாத மிருங்கங்கள் கூட இயற்கையின் பகுதியாகி விடுகின்றன....ஆனால் மனிதனோ.... எப்போதும் சுமந்து கொண்டிருக்கிறான் கற்பனைகளையும்...கற்பிதங்களையும்...



......எத்தனை ஆழமான அர்த்தங்கள் கொண்ட வரிகள்.................!!! மெளனமாக யோசிக்க வைக்கிறது. தேவா, அருமை. Nice meditation thoughts for the day.
dheva said…
நன்றி சங்கர் ! சீக்கிரமே...இன்னும் நல்ல டெம்பிளட் மாத்திடுறேன்! ஃபாலோயர் விட்ஜெட் இருக்குல்ல சங்கர்!
dheva said…
ஆமாம் சித்ரா......! நன்றிகள்!
###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################
எப்படி வேண்டுமானால் கற்பிதங்கள் கொள்ளுங்கள் மனிதர்களே....! உங்களின் எந்த செயலும் அல்லது சொல்லும் அதை பாதிப்பதில்லை...இன்னும் சொல்லப்போனால் உங்களின் அறியமையையும் தர்க்கங்களையும், பல விதமான நம்பிக்கைகளையும் உள்ளடக்கி அது....ஆனந்தத்தில் சலனமின்றி சந்தோசித்து இருக்கிறது.உங்கள் பதிவு அணைத்து நல்ல கருத்து உள்ளது

அருமையா வரிகள்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த