கனவுகளைக் கொல்லும்
நிஜங்கள்,
நிஜங்களை கெஞ்சும்
கனவுகள்,
எல்லாம் ஒழித்து
எனக்கொரு தனிமை தேவை,
ஆமாம் நானே இல்லாத தனிமை!
எதார்த்தங்கள் தொலைந்த
நிகழ்வுகள்,
என் சுயத்தை சுடும்
நெருப்புகள்,
இவை எல்லாம் கழிந்து...
எனக்குள் ஒரு மாற்றம் வேண்டும்
ஆமாம் முழுமையான
ஆளுமை கொண்ட மாற்றம்!
விவரிக்க முடியாத
நேசிப்புகள்,
வெறுமையை உமிழும்
மெளனங்கள்,
என்று வெறுப்பை தூண்டும்
காதலை நான் எரித்தே போட வேன்டும்
ஆமாம்,
காதலோடு எரித்தே போட வேண்டும்!
கொன்று போடும் உறவுகள்
உரிமைகளோடான
அத்து மீறல்கள்; கூச்சல்கள்
எல்லாம் நகர்ந்த
ஒரு பேரமைதி வேண்டும்
ஆமாம்...
சூன்யத்தில் சுகமாய் நான் கிடக்கும்
பேரமைதி!
எல்லாம் தொலைந்து
நானிருக்க என்னுள்
எல்லாமாயிருக்கும் எல்லாம்
கலைய...,
என்னை நிறைத்துப் போட்டு
வெறுமையாய் ரசிக்க
எனக்கு ,
ஒரு காதல் வேண்டும்
ஆமாம்,
எண்ணங்களும் எதிர்பார்ப்புகளுமற்ற...
ஒரு ஏகாந்தக் காதல்...!
தேவா. S
Comments
ஒரு ஏகாந்தமான காதல்...!//
...ஹ்ம்ம்.. அப்படி அமைந்து விட்டால், நாம் அதிர்ஷ்ட ஷாலி தாங்க. :-))
அழகான கவிதை..!!
உரிமைகளோடான
அத்து மீறல்கள்; கூச்சல்கள்
எல்லாம் நகர்ந்த
ஒரு பேரமைதி வேண்டும்//
...என்னவோ தெரியல, நான் என் மனதில் யோசித்துக் கொண்டிருந்த எல்லாம், உங்கள் வரிகளில் பார்க்கிறேன். :)
ச்சும்மா கேட்டேன்...
வழமை போல் கலக்கல்...
ச்சும்மா கேட்டேன்...
வழமை போல் கலக்கல்...