முகவரி I
கடைசியாக நீ ..
பகின்ற மொழியின் வீச்சில்
முறிந்தே போனது ..
நீ வளர்த்து விட்ட சிறகுகள்!
வானம் தாண்டும் என்
கனவுகள் எல்லாம்...
ஏக்கங்களாய் மனதினின்
விளிம்புகளில் நின்று...
எட்டி எட்டிப் பார்க்கின்றன..
எப்போது நீ வருவாய் என?
மீள உயறப்போகும் ஆசைகளில்
இருந்து புறப்படும் உத்வேகங்களில்...
சிறகசைத்து சிறகசைத்து...
அறை முழுதும் நிரம்பிக் கிடக்கிறது
உன் நியாபக இறகுகள்..!
கேலியாய் பார்க்கும்
வானத்தின் பார்வையை
சந்திக்கும் திரணியற்று
தெருமுனையில் மீண்டும்...
விழி பதிக்கிறேன்...
கடந்து சென்ற வழியினூடே
மீள நீ வருவாயென்று
முகவரி II
ஏதோ கேட்டாய்..
ஏதோ சொன்னேன்...
முடிவில்லா விவாதங்களை
பிரிதலுக்கு நியாயம் கற்பிகும்..
ஒற்றை வார்த்தையில் நிரப்பி
விலகித்தானே வந்து விட்டேன்..
இது நாள் வரையில்
ஒரு கூலியைப் போல
உன் நினைவுகளை சுமந்த நான்?
எல்லாம் கழிந்த பின்..
என் ஏகாந்த காலத்தில்
மெளனத்தில் நான் லயித்திருக்கும்
பொழுதுகளில் இரைச்சலாய்
தொடரும் உன் நினைவுகளை
என்னதான் செய்வது...?
தேவா. S
Comments
என் ஏகாந்த காலத்தில்
மெளனத்தில் நான் லயித்திருக்கும்
பொழுதுகளில் இரைச்சலாய்
தொடரும் உன் நினைவுகளை
என்னதான் செய்வது...?
....///
இந்த வரிகள் மிகப்பிடிச்சது.