என்னை யாரென்று...
அவளுக்குத் தெரியாது!
அவளிடம் நான் பேசியது கூட இல்லை;
புகைப்படத்தில்தான் என்னை அவளும்
அவளை நானும் பார்த்திருக்கிறோம்....
என் இயல்புகளை அவள் அறிந்ததில்லை
அவளின் இயல்புகளை நானறிந்ததுமில்லை
எங்களிடம் தினசரி பகிர்தல்கள் இல்லை;
பொய்யான புரிதல்கள் இல்லை;
எப்போதும் புகைப்படங்களில் மட்டுமே
புன்னகைகளை பரிமாறிக் கொள்வோம்...
அவள் வாழ்க்கையை அவள் வாழ்கிறாள்
என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன்...
அவளை காதலிப்பதாக நானும்
என்னை காதலிப்பதாக அவளும்
எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை
என் கவிதை வரிகளில் பல நேரம்
அவள்தான் பவனி வருவாள்
என்பது கூட அவளுக்குத் தெரியாது;
பரிட்சையம் இல்லாத இந்த உறவினை...
மனம் காதலென்கிறது;
புத்தி கடவுள் என்கிறது;
அவ்வளவுதான்...!
தேவா. S
Comments
அவள் யார் என்று எனக்கு தெரியாது
அவள் வாழ்கையை அவள் வாழ்வாள்(என்று நினைக்கிறன்)
என் வாழ்கையை நான் வாழ்கிறேன்....
இதுக்கு பெயர் தெய்விக காதல் என்று சொன்னேன்...
ஊரில் உள்ளவர்கள் என்னை எங்கே பார்த்தாலும்
கல் எடுத்து எறிகிறார்கள் :))
-இது ஒரு கவிதை என்று நான் நினைத்து கொண்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு அல்ல :)
மனம் காதலென்கிறது;
புத்தி கடவுள் என்கிறது;//
அருமையான வரிகள்..