Skip to main content

பிராப்ள பதிவர்....பப்பு...!!!!!


















சுத்தி நடந்துட்டு இருக்க விசயத்தை பத்தி ஏதோ அபிப்ராயத்தை சொல்லாம போய்ட்டோம்னா நம்ம தலை வெடிச்சே போயிடும்ன்ற மாதிரி தோண ஆரம்பிச்சுடுச்சு.... டாக்டர்...

திணறிக் கொண்டே பப்பு பேச ஆரம்பித்து இருந்தான்....

பொங்கி பொங்கி என்னைய மட்டும் தனியா வச்சுட்டு மிச்சம் இருக்குற உலகத்தையே காறித்துப்ப தோணுற எனக்கு ஒரு ட்ராபிக் சிக்னல்ல கரெக்ட்டா லைன்ல நிக்க துப்பு இல்லீங்க...! ரெயில்வே ஸ்டேஸன்ல ட்ரெயின்ல இருந்து இறங்கி பிளாட்பார்ம தாண்டி வெளியில வர்றதுக்குள்ள பஞ்சப் பரதேசிங்க பிச்சைக் கேட்டு தொல்லைப் பண்றத பாத்துட்டே வந்தாலும் யாராச்சும் ஒரு முடியாத வயசானவங்களுக்கு பத்து ஒத்த ரூபாய  கொடுக்க வக்கு இல்லாத நான்....

பொதுவா ஊர்ல எங்க்யாச்சும் ஒரு பிரச்சினை நடந்து அதுகு ஒரு நடிகனோ இல்லை அரசியல்வாதியோ ஏதாச்சும் உதவி பண்ணலேன்னா அவுங்கள பாத்து ஏண்டா எச்சக்கலைங்களா? ஏன் வூட்டு காச...நல்லா கவுனிங்க டாக்டர்.. ஏன் வூட்டு காச... எச்சத் தின்னு பெரிய நடிகனாவும், அரசியல்வாதியாவும் ஆன டுபாக்கூருங்களா.....இந்த இந்தப் பிரச்சினைக்கு இன்னாடா செஞ்சு நீங்க கழட்டுனீங்கன்னு... கம்ப்யூட்டர் பொட்டிய தொறந்து கோபம் தீர தட்டி எங்கயாச்சும் ஒரு சமூக பொது வெளியில வாந்தி எடுத்தாத்தான் திருப்தியா இருக்குங்க சார்...

எனக்கு எப்பவுமே ராஜா சார பிடிக்கும்னு எல்லோர் கிட்டயும் திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கேன் சார்....ஆனா ஒரு பாட்டைக் கூட மன நிம்மதியோட ஒக்காந்து நான் கேட்டதே கிடையாது....நான் எது செஞ்சாலும் அதை நிம்மதியா என்னால செய்ய முடியல.. தட்டுல சோத்தப்போட்டு துன்ன சொல்ல அதை மொதல்ல போட்டோ புடிச்சு பேஸ்புக்லயோ இல்லை வேற ஏதாச்சும் ஒண்ணுலயும் போட்டு இதை நான் துன்னப் போறேன்னு சொன்னாதான் சார் தொண்டையில சோறு எறங்குது...

என்னைய பாத்து நாலு பேரு நல்ல எழுதுற.....நீ..... , உங்க கருத்து அருமை , உங்களப் போல யாரும் உண்டா? அசத்தீட்டிங்கன்னு... பாராட்டி பாராட்டி ஏதாச்சும் சொன்னாதான சார்....அட மனசுக்குள்ள என்ன வேணா நினைச்சுக்கிடட்டும், ஆனா பொது வெளியில சும்மா நாலு வார்த்தை இப்டி சொன்னாதான் இந்த சொரணை கெட்ட மனசு சிக்குனு ஜில்ப் ஆகி ரெம்ப சந்தோசப்படுது...., அதுவும் பெரும்பாலும் பொண்ணுங்க யாராச்சும் பாராட்டிட்டா....... டக்குன்னு சிச்சுவேசன், லொக்கேசன் எல்லாம் மாத்தி கனவுல ஏதோ ஒரு வெளிநாட்டுக்குப் போயி ஜிங்கு ஜிங்குன்னு டான்ஸ் ஆடுற மாதிரி எல்லாம் தோணுது சார்...! 

கண்ணை மூடிக்கிட்டு....நான் இப்ப அமெரிக்காவுல இருக்கேன்....ஆமாம் ஆமா வெள்ளை மாளிகைதான்... யெஸ்.. யெஸ்.. ஒபாமா கூடத்தான்... நாங்க ஒண்ணா சாப்டோம்.... இப்போ ஒலக அரசியலப் பேசிட்டு இருக்கோம்..... 

இப்ப லண்டன்ல இருக்கேன். யெஸ்.. யெஸ்....பேலஸ்லயேதான்... மகாராணி கூட இருக்காங்க....

நான் பெரிய ஹீரோ.. நான் ஒரு பெரிய எழுத்தாளன்....நான் பெரிய புரட்சியாளன்...........நான் ஒரு கவிஞன்....நான் ஒரு விமர்சகன், நான் ஒரு பெரிய சமூக சேவகன்...... நான் ஒரு எல்லாமே....

நான் ஒரு பெரிய ரவுடி.....அடிச்சுடுவேன்.......பேத்துடுவென்.............நான் வந்து.. பெரிய......பெரிய......ஆளாக்கும்....

கண்ண தொறந்துகிட்டே இப்படி எல்லாம் பலவிதமா கனவுகள என்னால இணையத்துல பார்க்க முடியுது.....சார்....

என்ன ஒண்ணு கடைசியில என்னோட எல்லா வேலையும் கெட்டுப் போயி,,,,அமிஞ்சிக்கரையில இருக்க என் ஆபிஸ்ல இருந்து ஆபிஸ் விட்டு வீடு வர்ரதுக்கு பஸ்சுக்கு நிக்கும் போது ஆட்டோக்காரன் ரோட்டு ஓரமா கிடக்குற சேத்த மூஞ்சில அடிச்சுட்டுப் போகும் போது... ரொம்ப கஷ்டமாவும் ஒண்ணியும் செய்ய முடியாமையும் நிக்க வேண்டி இருக்கு சார்....

பஸ்ஸுக்குள்ள கூட்டத்துல முன்னால இடிக்கிறானுகோ.....பின்னால இடிக்கிறானுகோ.... ஷேவ் பண்ணாம வந்து தாடியால ஷோல்டர்ல கீறுரானுங்கோ... காலை மிதிச்சு நாசம் பண்றானுகோ....முடியலை.... ரோட்ல ட்ராபிக் மேல ஜன்னல் வழியா எச்சித் துப்புறானுகோ.. கண்டக்டர் வேற அசிங்க அசிங்கமா திட்டி ....இத்தப் பாரு.. கனவு கண்டுகினு கீது... அப்பால போன்னு தள்றான்...

இன்னா சார் செய்ய முடியும் நானு...? வூட்டுக்கு போனா கரண்ட்  இல்லை.... பைக்க எடுத்தா பெட்ரோல் விக்கிற வெலையில பைக்கு ஒரு கேடான்னு... நைனா சவுண்ட் வுடுறாரு..... எல்லா வெல வாசியும்  பீக்ல போவுது... நீ தக்காளிய துன்னாம ஏன்டா துப்புறன்னு அம்மா கத்துது...

பேப்பர எடுத்துப்படிச்சா..... காவிரி தண்ணி உடாம பத்தாயிரம் ஏக்கருக்கு மேல வெவசாயம் இல்லாம கெட்டுப் போச்சு, ஜெயலலிதா அம்மா சரியா பேசி தண்ணி வாங்கலன்னு சொல்றானுகோ....

சிவகாசில பட்டாசு மருந்து வெடிச்சு புள்ளைங்க எல்லாம் செத்துப் போச்சுங்க.... அனுமதியே கொடுக்கலேன்றானுகோ..., இடமே சின்ன இடம்ன்றானுகோ..., தீபாவளி ஒரு கேடானு கேக்குறானுகோ, நிலக்கரி ஊழல்ன்றானுகோ, பாராளுமன்றம் முடங்கிப் போச்சுன்றானுக......

இதுக்கு எல்லாம் இன்னா தீர்வுன்னு ராத்திரி முச்சூடும் ரோசிச்சு... ஒரு முடிவ எடுத்து மறுநாள்.....ஆபிசுக்குப் போயி நான் அங்க அங்க பொங்கி, அங்கிட்டும் இங்கிட்டும் போயி எழுதி, எவனாச்சும், லைக்கோ ஒரு கமெண்ட்டோ போட்டுட்டா... கண்ண மூடிக்கிட்டு ...நான் அவன்டா.. இவன்டா, பிரபல புலிடான்னு மறுபடியும் கனவு... கண்ண தொறந்துகிட்டே கண்டுபுட்டு.... கடைசியில.. என் தாலி ஆபிஸ்ல அந்து போயி....வேலை கெட்டு போயி.....ஆபிஸ்ல திட்டு வாங்கி...அங்க எச்சூஸ் கேட்டு.... மூஞ்சத் தொடச்சுக்கிட்டு......மறுபடி சாங்காலம் பஸ் புடிச்சு..........

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ......எனக்கு பைத்தியமே புடிக்கப் போவுது டாக்டர்.. ஏழு வருசமா பொது வெளியில இயங்கிட்டு இருக்க ஒரு பிரபலம் நானு....எனக்கு என்னா வியாதின்னு பாத்து கொஞ்சம் சரி செஞ்சு வுடுங்கோ......

பப்பு அலறிக் கொண்டிருந்தான்....டாக்டர் அவசரமாய் ஏதோ ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜ் பேஸ் புக்கில் போட்ட படி.. ஒன் செகண்ட் ப்ளீஸ்... என்று விட்டு... யெஸ்..... என்னாச்சு....எங்க மறுபடி சொல்லுங்க... என்றார்....

பப்பு.........டேய்ய்ய்ய்ய்ய்ய் என்று டாக்டரை நோக்கிப் பாய்ந்தான்.....!


தேவா. S

Comments

Kousalya Raj said…
வாவ் சூப்பர் !! பப்பு ரிடர்ன்ஸ் !!!!

//அங்க அங்க பொங்கி, அங்கிட்டும் இங்கிட்டும் போயி எழுதி, எவனாச்சும், லைக்கோ ஒரு கமெண்ட்டோ போட்டுட்டா... கண்ண மூடிக்கிட்டு ...நான் அவன்டா.. இவன்டா, //

பப்பு இன்னைக்கு புல் பார்ம்ல இருக்கார் போல !! அதுக்காக பொதுவெளியில(!) எல்லாத்தையும் இப்படியா ஓபேனா புட்டு புட்டு வக்கிறது... சிரிச்சு முடியலைங்க. :))

//ஏழு வருசமா பொது வெளியில இயங்கிட்டு இருக்க ஒரு பிரபலம் நானு...//

இதுவேறயா ? :)
இத்தன நாளா தெரியாம போச்சே...தெரிஞ்சா இதுக்காகவே ஒரு விழா எடுத்து இருக்கலாம்.:)

//Labels: கட்டுரை அனுபவம்//

யாரோட அனுபவம் ?
பப்பு ?
டாக்டர்?
தேவா?
:))

...
எப்போவோ ஒருமுறை வராமல் பப்பு அடிக்கடி வரணும் !!

dheva said…
கெளசல்யா @ பப்பு யாருன்னு தெரிஞ்சுக்கிட்டே இப்டி ஒரு கேள்வி கேட்டா எப்டிங்க..?

ஹா.. ஹா!!!!

நன்றிகள்.!
Kousalya Raj said…
எனக்கு தெரியும், ஆனா மக்களுக்கு கொஞ்சம் தெரிஞ்சா எந்த அட்ரெஸ்க்கு ஆட்டோ அனுபலாம்னு முடிவு பண்ண வசதியா இருக்கும் ...அதுக்கு தான் :))

(ஆட்டோ ல கூப்ட்டு போய் விழா எடுக்க)

:))
பங்காளி...ம்...ம்ம்...ம்ம்ம்.... :-)))

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த