Skip to main content

அஜித் என்னும் வேதாளம்...!



செம்ம ஹாட்டான மட்டன் தம் பிரியாணி ஆர்டர் பண்ணி சாப்டுக்கிட்டு இருக்கும் போதே இது சாம்பார் சாதம் மாதிரி இல்லை, ரசம் போட்டு கை நொறுங்க அள்ளித் திங்கற மாதிரி இல்லையேன்னு யோசிச்சா அது எப்டி அபத்தமோ அப்டியான அபத்தம்தான் வேதாளம் பார்க்க போய் உக்காந்துக்கிட்டு அதுல லாஜிக் பத்தி எல்லாம் யோசிக்கிறது.

தமிழ் சினிமா மரபுல ஹீரோக்கள் எல்லாம் சூப்பர் ஹீரோக்களா தங்கள மாத்திக்கதான் எப்பவுமே முயற்சி செஞ்சுட்டு இருக்காங்க. சூப்பர் ஹீரோவா ரசிகர்களோட மனசுல உக்காந்துட்டா போதும் அதுக்கப்புறம் அவுங்க என்னா செஞ்சாலும் அதை மக்கள் ஏத்துகிடத்தான் செய்வாங்கன்றது உண்மைனாலும் ஒரு ஹீரோ தன்னை சூப்பர் ஹீரோவா பரிணமிச்சு திரையில தன்னை மிகப்பெரிய ஆளுமையா காட்டி அதை அப்டியே ஆடியன்ஸ ஏத்துக்க வைக்கிறதுங்கறதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை. இந்த ட்ரான்ஸ்மிஷன மிகத்துல்லியமா செஞ்சுட்டா காலத்துக்கும் அவுங்கள எல்லாத்  தரப்பு ரசிகர்களும் விரும்பிப் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க.

எம்.ஜி.ஆர்க்கு நடந்த அந்த ட்ரான்ஸ்மிஷன் ரஜினிக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்து இன்னிக்கு தேதி வரைக்கும் திரையில ரஜினி வந்தாலே பார்த்துக்கிட்டு இருக்க ரசிகனுக்குள்ள வேதியல் மாற்றங்கள் எல்லாம் நடந்து உணர்சிப் பிழம்பா திரையப் பாத்து தலைவாவாவாவாவா....ன்னு கத்த ஆரம்பிச்சுடுவான்றது நம்ம எல்லோருக்குமே தெரிஞ்ச உண்மை.

இந்த மெகா ட்ரான்ஷ்மிஷன இயக்குனர் சிவாவோட உதவியோடு ஜஸ்ட் லைக் தட் அஜித் கிராஸ் பண்ணி தன்னை நிஜமான ஒரு சூப்பர் ஹீரோ இமேஜ்குள்ள அட்டகாசமா பொருத்திக்கிட்டார்ன்னுதான் சொல்லணும். அஜித் நடிக்காம வேற யார் நடிச்சு இருந்தாலும் மண்னைக் கவ்வுற திரைப்படம்தான் வேதாளம் என்பதற்கு நிறைய விசயங்கள் எடுத்துக்காட்டா படத்துல இருந்தாலும். அஜித் என்னும் ராட்சசன் அத்தனை மைனஸ் பாயிண்ட்களையும், லாஜிக் இல்லாத சீன்களையும் ஒரு வேதாளமாவே மாறி தூக்கி சாப்டுட்டு இந்தப்படத்தை சூப்பர் டூப்பர் வெற்றிப்பட்டமா மாத்தி இருக்கார். அஜித்தோட பழைய படங்கள்ல நிறைய நல்லபடங்கள் இருந்தாலும் இனி வரப்போற படங்கள்ல இன்னும் நிறையபடங்கள் வந்தாலும்....

வேதாளம் அஜித்தோட கேரியர்ல ஒரு மைல் கல்லுன்னுதான் சொல்லணும்.

இப்டி...இப்டி ஒரு அஜித்த பார்க்கத்தான் அவரோட ரசிகர்கள் எல்லோரும் காலமா கத்துக் கிடந்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன். ப்ரேம் பை ப்ரேம் எல்லா காட்சிகள்ளயுமே அஜித் ஆக்ரோஷமா திரைய ஆக்கிரமிச்சு இருக்கத பாத்தப்ப ஒரு ரஜினி ரசிகனான எனக்கு ரஜினி படம் பார்த்த அதே  பீல் கிடைச்சது நிஜமான உண்மை. அஜித் தங்கையோட கல்கத்தா வர்றார். அஜித் டாக்ஸி ஓட்டுறார், அஜித் வில்லன்களை பழிவாங்குறார், படத்துல வர்ற ப்ளாஷ் பேக்குல வேதாளம் கணேஷ்ன்ற ரவுடியா மவுசு காட்டுறார், பின் கடைசி வில்லனையும் பழி வாங்கிட்டு படத்தை ஒரு சூப்பர் இன்னிங்சை பினிஷ் பண்ற டோனி சார் மாதிரி முடிச்சுட்டு கிளம்பிட்டே இருக்கார்.

அஜித்...அஜித் அஜித்....படம் முழுக்க அஜித். அஜித் வர்ற ஒவ்வொரு சீனுமே தெறி மாஸ்ன்றதுதான் படத்துல இருக்க மிகப்பெரிய ப்ளஸ். இயக்குனர் சிவா ஸ்கெட்ச் போட்டு திரைக்கதையை அமைச்சு  தலயோட முழுப்பரிமாணத்தையும் வேதாளத்துல ரொம்ப ஜாலியா புட்டுப் புட்டு வைச்சிறுக்கறத கண்டிப்பா பாராட்டியே ஆகணும். எல்லா தமிழ்ப்படத்துலயுமே ஹீரோ அடி வாங்கிட்டு அப்பாவியா இருந்துட்டு மறுபடி வில்லன போட்டு புரட்டி எடுக்குற மாதிரி சீன்ஸ் நிறையவே வந்திருக்கு. இந்த முடிச்சோட ஒரு விரிவாக்கம்தான் பாட்சா அதே மாதிரி அதே முடிச்சோட இன்னொரு விதமான விரிவாக்கம்தான் வேதாளமே தவிர எல்லோரும் சொல்ற மாதிரி வேதாளம் எந்தப் படத்தோட ரீமேக்கோ அல்லது காப்பியோ கிடையாதுன்றதுதான் உண்மை.


முதல் காட்சியில இருந்து ஆரம்பிக்கிற விறுவிறுப்பு கடைசிவரை குறையாமா ச்ச்சும்மா ஜிவ்வுன்னு ரோலர் கோஸ்டர்ல சுத்த விட்ட மாதிரி துறு துறுன்னு எகிறிப்பாய்சுட்டு இருக்கும் போது பின்னணி இசை அப்போ அப்போ வந்து நம்ம காதை பஞ்சர் ஆக்கிட்டும் போகுது. பாட்டுல கவனம் செலுத்தின அனிருத் இன்னும் கொஞ்சம் மிரட்டுற தொனியில பின்னணி இசை அமைச்சிருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமேன்னு எனக்குத் தோணின மாதிரி நிறைய பேருக்கு தோணி இருந்திருக்கலாம். ஆக்ரோஷமா அஜித் உறுமும் போதெல்லாம்  ஸ்கிரீன்ல நெருப்பு பொறி பறக்குது அதுவும் முதல் வில்லன ஷிப்ல வச்சுப் போட்டுத் தள்ளும் போது மியூசிக்க போட்டு விட்டுட்டு தலை கித்தார் வாசிக்கிற மாதிரி ஆடிக்கிட்டே எதிரிங்கள போட்டுத் தள்ற இடம்...நிஜமாகவே அதிர்கிறது.

சிம்கார்டை வச்சி தல இருக்கிற இடத்தை லொக்கேட் பண்ணி அவர பிடிக்க அந்த இடத்துக்கு போறதுக்கு முன்னாலேயே அஜித் வில்லன் இருக்க இடத்துக்கு நேரடியா அவரே வர்றார். அதெப்படி அவர் வர்றார் அவருக்கு எப்டி அந்த இடம் தெரியும்னு ஞானக் கேள்வி கேக்குற ஐடியா எல்லாம் வரத்தான் செய்யுதுன்னாலும் தலை எப்டியாச்சும் கண்டு பிடிச்சு இருப்பார்னு அதைப்பத்தி உனக்கென்னன்னு மனசு நம்மள அதட்டி நம்ப வச்சு படத்துக்குள்ள போட்டு அமுக்கிடுது. அதான் தல, இதைத்தான் நான் மேஜிக்னு மேல சொன்னேன், இதைத்தான் அந்த சூப்பர் ஹீரோ ட்ராஸ்மிஷன்னும் சொன்னேன். படம் முழுக்க இந்த மாதிரி தெறிகள் நிறைய இருக்கத்தான் செய்யுது, இந்த மாதிரி சீன்ல எல்லாம் ஆக்ரோஷமா அஜித் சீறிப்பாய்ந்து நிஜமாவே ச்ச்சும்மா தெறிக்க விடுறார்.

காசுக்காக என்ன வேணா செய்ற ஒரு ரவுடி வாழ்க்கையின் இடையில வற்ற ஒரு பெண் அவளோட குடும்பம் சூழல் எல்லாம் சேந்து பாசம்னா என்னனு ரவுடி அஜித்துக்கு ஒரு பாடத்தைக் கத்துக்கொடுக்குது அவர் நல்ல மனுஷனா மாறி சாந்தமா போய்டாம அதே ஸ்பீட்ல காசுக்காக என்ன வேணா செஞ்சுட்டு இருந்த அவரோட அதர்மமான மனசு குறுகுறுக்க பாசத்துக்காக ஒரு ரவுடித்தனத்தை செஞ்சு முடிக்கிறார். இதான் கதையோட மொத்த சாராம்சம். வேதாளம் கணேஷா அஜித் அறிமுகமாகிற இடத்துல இருந்து அவர் ப்ளஷ் பேக் சொல்லி முடிக்கிற வரைக்கும்  ரவுடி அஜித் கலக்கி எடுக்கிறார். அதுவும் லட்சுமி மேனனை சந்திக்கும் அந்த டீக்கடை சீன்ல...

தன்னை சுத்தி உக்காந்து டீக்குடிக்கிற மாதிரி தன்னை போட்டுத் தள்ள சமயம் பார்க்கும் எதிரிகளை கவனிச்சுட்டு....அஜித் எழுந்து ஒண்ணு டீயக் குடி இல்ல என்னை அடி என்று தலையைத் தடவிக் கொண்டு ரவுடிகளை துவம்சம் பண்ணுமிடம் எல்லாம் செம்ம தூள் +ஸ்டைல் + மாஸ். தம்பி ராமையாவும் அவரது மனைவியாய் நடிப்பவரும் கண் தெரியாதவர்களாய்  அப்பாவித்தனமாய் தங்கள் பாசத்தை ரவுடிகளிடமும், ரவுடி சார், ரவுடி சார் என்று அஜித்திடம் அன்பு காட்டுவதும் படத்தின் ஜீவனை இன்னும் தூக்கிப் பிடித்து படம் பார்க்கும் நம்மை நெகிழ வைக்கிறது. தம்பி ராமையாவின் நடிப்பு இந்தப் படத்தில் எஸ்ட்ராடினரி அதுவும்  இறக்கும் போது சண்டாளி என்னை விட்டுப் போய்ட்டாளா என்று தன் மனைவி இறந்த பின்பு அஜித் மடியில் படுத்துக் கொண்டு கதறுவதும், அடப்பாவி நீ காசு கொடுக்காம வேலை செய்ய மாட்டியேய்யா என்று கையில் கிடக்கும் மோதிரத்தை அவிழ்த்து அதோடு தன் பாக்கெட்டில் இருக்கும் கொஞ்சம் பணத்தையும் எடுத்து ரத்தத்தோடு அஜித் கையில் வைத்து விட்டு செத்துப் போகுமிடம் நிஜமாகவே கண்ணீர் வரவைக்கிறது. குற்ற உணர்ச்சியோடு அஜித் அந்தக் காசை உதறிவிட்டு லட்சுமி மேனனை காப்பற்றுமிடமும், பின் பழசை மறந்து போகிற லட்சுமிமேனனின் கையைப் பிடித்தபடி தவிர்க்க முடியமால அவரது அண்ணனாய் மாறுமிடத்திலும் அஜித்தின் நடிப்பு ஜொலிக்கிறது.

எல்லாம் மறந்து போன லட்சுமி மேனனுக்கு அஜித்தை மட்டுமே பாசமிகு அண்ணனாய் நியாபகம் இருக்கிறது.  தங்கைக்கு தன்னுடைய அதிரடியான தனது  இன்னொரு பக்கம் தெரியாமல் பார்த்துக் கொள்ளும் அஜித் க்ளைமாக்ஸில் லட்சுமி மேனன் துப்பாக்கியைத் தூக்கிப் போட்டு நீ சுடுண்ணா.. சுடுண்ணா என்று கதறும் போது தனக்கு துப்பாக்கிப் பிடிக்கவே தெரியாது என்று அழுது நடித்தபடியே லட்சுமி மேனன் கண் மூடிக் கொள்ளும் அந்தக் கணத்தில் கொடூரமாய் வில்லனைப் பார்த்து சிரித்தபடியே துப்பாக்கியைச் சுற்றியபடியே போட்டுத் தள்ளுவதோடு படம் முடிகிறது.


அழுது, சிரித்து அப்பாவியாய், முகத்தை அஷ்டகோணலாய் அஜித் சில காட்சிகளில் முகத்தை மாற்றிக் கொள்ளும் அதே வேகத்தில் பக்கா வில்லத்தனமாய் முகத்தை மாற்றிக் கொண்டு கர்ஜித்தபடியே எதிரிகளைப் பந்தாடும் போதெல்லாம் நம்மை மறந்து கைதட்டித்தான் ஆகவேண்டும். அஜித்துக்கென்று பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்ட இந்தப் படத்தில் " நீயும் நானும் என்ன தேசத்தலைவர்களா சொன்னத சொன்னபடி செய்ய....நீ கெட்டவன்னா... நான் கேடு கெட்டவன்" என்று அஜித் உறுமும் போதெல்லாம் நிஜமாய் ஒரு ட்ரன்ஸ்மிஷன் நமக்குள்ளும் நிகந்தேறி விடுகிறது.

ஸ்ருதிஹாசனையும், அவர் பாடும் ஒரு பாடலையும் பின்னணி இசை நச்சரிப்பையும் தலயின் ஆக்ரோஷமான சீற்றம் மட்டுப்படுத்தி மறைத்து விட...ஆளுமா டோலுமாவையும், வீர விநாயக பாடலையும் கொண்டாடியபடியே...

சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த சிவா & டீமிற்கு மிகப்பெரிய பாராட்டினை தெரிவித்தபடியே, தலைன்னா மாஸ்டா, தலைன்னா தெறிடா, தலன  அதிரடிடா என்று...

அஜித் ரசிகர்கள் அஜித்தின் இந்த சூப்பர் ட்ரீட்டினை பார்த்து ரசித்து கம்பீரமாய் தல ரசிகன் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்...!




தேவா சுப்பையா...








Comments

ரொம்ப மாஸ் படம் ... சுமாரா இருந்தாலே ஆடுவோம்... படம் தெறி மாசா இருந்தா சும்மா விடுவோமா ... தல சும்மா கை அசைக்குறது எல்லாம் மாசா இருக்கு... தல படம் எப்படி சூப்பரோ அதே மாதரி தெறி விமர்சனம்


ஆசம் ஆசம் ...
படம் ரொம்ப மாஸ்....
அஜீத் கலக்கியிருக்கிறார்...

தங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன்...
முடிந்தால்... முடியும் போது எழுதுங்கள்...

http://vayalaan.blogspot.com/2015/11/12.html

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல