ஒரு மழை விட்டும் விடாத
மாலைப் பொழுதில்
நான் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன்
குளிரும் சிறு தூறலும் என்னை
ஏதோ செய்யத் தொடங்கிய
அந்தக் கணத்தில்தான்
தூரத்தில் நடந்து வருவது
நீயாய் இருக்குமோ என்று
யோசித்துக் கொண்டிருக்கையிலேயே
என்னை நெருங்கி விட்டாய் நீ
சடக்கென்று தலைகுனிந்து கொண்டேன்
உன்னை நேருக்கு நேர் எப்படி
நான் யாரோவாய் பார்த்து செல்வது...?
ஒரு கணம் என்னருகில் வந்து நீ
நிற்பது போலத்தெரிகிறது
இருந்தாலும் நான் நடந்து கொண்டிருக்கிறேன்
உன்னைக் கடந்து சென்று விட்டேன்
நி நின்று கொண்டிருக்கலாம்
சென்றிருக்கலாம் அல்லது
என்னோடு நடந்து கூட பின்னாலேயே
வந்து கொண்டிருக்கலாம்
நம்மை யாரோவாக்கி விட்டிருந்த
இந்தக் காலம்தான்
முன்பொரு நாள் நம்மை சேர்த்தும் வைத்திருந்தது...
மழை அடித்துப் பெய்யத் தொடங்கி இருந்தது
நடப்பதை நிறுத்தி விட்டு திரும்பிப் பார்க்கிறேன்
யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்த
அந்தத் தெருவின் எதோ ஒரு வீட்டிலிருந்து
மல்லிகை மொட்டுக்கள் சட் சட்டென்று
தங்களைத் திறந்து கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன்
மழை வாசமும் மல்லிகை வாசமும்
மனதை நிறைக்கத் தொடங்கியிருக்க
தொப்பல் தொப்பலாய் நான் நனைந்தபடி
நடந்து கொண்டிருக்கிறேன் நான்...
யார் யாரோ கடந்து
சென்று கொண்டிருக்கிறார்கள் என்னை...
தேவா சுப்பையா...
மாலைப் பொழுதில்
நான் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன்
குளிரும் சிறு தூறலும் என்னை
ஏதோ செய்யத் தொடங்கிய
அந்தக் கணத்தில்தான்
தூரத்தில் நடந்து வருவது
நீயாய் இருக்குமோ என்று
யோசித்துக் கொண்டிருக்கையிலேயே
என்னை நெருங்கி விட்டாய் நீ
சடக்கென்று தலைகுனிந்து கொண்டேன்
உன்னை நேருக்கு நேர் எப்படி
நான் யாரோவாய் பார்த்து செல்வது...?
ஒரு கணம் என்னருகில் வந்து நீ
நிற்பது போலத்தெரிகிறது
இருந்தாலும் நான் நடந்து கொண்டிருக்கிறேன்
உன்னைக் கடந்து சென்று விட்டேன்
நி நின்று கொண்டிருக்கலாம்
சென்றிருக்கலாம் அல்லது
என்னோடு நடந்து கூட பின்னாலேயே
வந்து கொண்டிருக்கலாம்
நம்மை யாரோவாக்கி விட்டிருந்த
இந்தக் காலம்தான்
முன்பொரு நாள் நம்மை சேர்த்தும் வைத்திருந்தது...
மழை அடித்துப் பெய்யத் தொடங்கி இருந்தது
நடப்பதை நிறுத்தி விட்டு திரும்பிப் பார்க்கிறேன்
யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்த
அந்தத் தெருவின் எதோ ஒரு வீட்டிலிருந்து
மல்லிகை மொட்டுக்கள் சட் சட்டென்று
தங்களைத் திறந்து கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன்
மழை வாசமும் மல்லிகை வாசமும்
மனதை நிறைக்கத் தொடங்கியிருக்க
தொப்பல் தொப்பலாய் நான் நனைந்தபடி
நடந்து கொண்டிருக்கிறேன் நான்...
யார் யாரோ கடந்து
சென்று கொண்டிருக்கிறார்கள் என்னை...
தேவா சுப்பையா...
Comments