இருத்தல் மட்டுமே சத்தியமென்பதை உணர்ந்தபடி ஒன்றுமில்லாததை எழுதிக் கொண்டிருக்கிறேனே இப்போது, அதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்களே, இல்லாமல் இருக்கும் காலத்தைப் போன்று அசைவற்றுப் போய் அதை
தான் எழுத்து அதிகபட்சமாய் செய்ய முயலும் அல்லது முடியும்.
ஏதோ ஒன்றை சொல்ல முயலும் எல்லா முயற்சிகளையும் அறுத்தெறிந்து விட்டு ஒரு முற்று புள்ளியோடு முடிந்து போகும் எழுத்துக்கள் எல்லாம் நிஜத்தில் அதோடு முடிந்து போய்விட்டதென்றுதானா நீங்கள் கருதுகிறீர்கள்...?
எங்கிருந்ததோ அது...
அது அங்கேதான் இருக்கிறது இன்னும்
எப்போதுமிருந்தது போலவே
அது இங்கும்தானிருக்கிறது
என்றறியும் போது பிறக்கும்
தெளிவினைத்தான் காலம் காலமாக
சித்தார்த்தர்களுக்கு
எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன
போதிமரங்கள்...,
போதும் போதுமெனுமளவிற்கு
கனவுகளை உங்கள் பைகளில் நிரப்பிக் கொள்ளுங்கள்
வழிநெடுகிலும்...
அது மட்டும்தான் உங்களுக்குத்
துணையாயிருக்கப் போகிறது...!
தேவா சுப்பையா...
Comments