தீரம் என்ற பெயரில் எல்லாவற்றிற்கும்
முன் செல்ல வேண்டும்...
கோடி பேருக்கு ஒரு நீதி சொல்லி
அது சரிதான் என்று நிறுவ வேண்டும்...
ஒவ்வொரு நிமிடத்திற்குள்ளும் ஒளிந்திருக்கும்
ஆபத்துக்களை கெதக் கெதக் என்று
கடக்க வேண்டும்...
பயப்படாத மனிதன் உண்டா இந்த புவியில்வ்.?
ஆனால்...
ராஜாக்கள் வாழ்க்கையில் பயப்படவே கூடாது...
உடல் முடியாத போதும்
கம்பீரமாய் நடக்கப் பழகவேண்டும்...
குரல் வரவில்லை என்றாலும் கர்ஜிப்பது போல
நினைத்துக் கொண்டு மியாவ் என்றாவது சப்தமெழுப்ப வேண்டும்
ஊரையே நடு நடுங்க வைத்து விட்டு
நம்பிக்கையின் நாயகனென்று முகம் இறுக்கி,
உதடு துடித்து மீசை முறுக்கிவிட்டு...
மொத்தத்தில்...
வலிக்காத மாதிரியே நடிக்க வேண்டும்...
ஆமாம்...
பேரவஸ்தைதான் ஒரு ராஜாவாக இருப்பதென்பது...!
தேவா சுப்பையா...
Comments
அருமை.